சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழ அம்மாச்சிபட்டி கிராமத்தில் சேவுகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மருமகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது குறி பார்க்கும் நபர் ஒருவர் வந்து ஆண் வாரிசு பெறுவதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என கூறினார். இதனை நம்பி சேவுகளின் மருமகள் அந்த நபரிடம் 21,000 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.

அதனை வாங்கிக் கொண்டு பரிகாரம் செய்யாமல் அந்த நபர் அங்கிருந்து சென்றார். இதுகுறித்து மதகுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பரிகாரம் செய்வதாக கூறி பணத்தை மோசடி செய்தது தஞ்சாவூரை சேர்ந்த கர்ணன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.