சேலம் மாவட்டத்தில் உள்ள ராக்கிபட்டி பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி இறந்து விட்டதால் நல்லம்மாள் தனது மகன் தமிழ்மணியின் பராமரிப்பில் இருந்தார். இந்நிலையில் வீடு மற்றும் விவசாய நிலங்களை பாகம் பிரிப்பது தொடர்பாக நல்லம்மாளின் பிள்ளைகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த நல்லம்மாள் வீட்டை சுத்தம் செய்யும் திராவகத்தை குடித்து நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு வலியில் அலறி துடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நல்லம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.