திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருங்குளத்தில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சங்கரலிங்கத்திற்கும், அவரது மகன் காளிதாசுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று காளிதாஸ் தனது தாய், தந்தையை தகாத வார்த்தைகளால் தட்டி கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் காயமடைந்த சங்கரலிங்கமும், அவரது மனைவியும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் காளிதாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.