நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மார்க்கெட் பகுதியில் இருக்கும் ஒரு கடையில் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனால் கடை உரிமையாளரான ஜெயசிம்மன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 150 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.