புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தீத்தானிப்பட்டியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர் பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் பாலமுருகனை சரமாரியாக தாக்கிவிட்ட அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் காயமடைந்த பாலமுருகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அறிந்த பாலமுருகனின் உறவினர்கள் தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பிறகு உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் மாணவரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கொங்கராகோட்டையைச் சேர்ந்த சிவா, சசி, கதிர் உள்ளிட்ட 6 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.