பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் காந்தியடிகள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஜனவரி 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியினை வாசித்தார்.

உடனே அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் வடிவேல் பிரபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்ய பாலகங்காதரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.