ராமநாதபுரம் மாவட்ட வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் பிரவீன் குமார் என்பவர் வீட்டுமனை பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார். அப்போது செயற்பொறியாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி பாண்டியராஜன், பதிவரை எழுத்தர் ரவிச்சந்திரன் ஆகியோர் பெயர் மாற்றம் செய்ய பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். இது குறித்து பிரவீன்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிரவீன் குமார் அவர்களிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒப்பந்த பணியாளர் பாலாமணி, செயற்பொறியாளர் பாண்டியராஜன், பதிவறை எழுத்தர் ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.