கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் இருக்கும் குடியிருப்பில் எலக்ட்ரீசியனான ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரது மனைவி குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மேல் வீட்டில் வசிக்கும் ஜெயபால் என்பவர் கீழே இறங்கி வந்து ஜன்னல் வழியாக பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் சத்தம் போட்டதால் ஜெயபால் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.