தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான யசோதா திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தைத் தொடர்ந்து சமந்தா நடிப்பில் சாகுந்தலம் என்ற திரைப்படம்‌ ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவின் போது நடிகை சமந்தா கண்ணீர் விட்டு அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. அதன் பிறகு நடிகை சமந்தா சமீப காலமாக மயோசிடிஸ் செல்லும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வரும் நிலையில் தன்னுடைய பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா தன் வீட்டு சோபாவில் படுத்து இருக்கும் போது அவருடைய செல்ல நாய்க்குட்டிகள் அவருக்கு தட்டி கொடுத்து கவலை படாதீங்க என்று சொல்வது போன்ற ஒரு புகைப்படத்தை சமந்தா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு don’t worry mummy, I got your back என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் நீங்கள் விரைவில் குணமடைந்து விடுவீர்கள் என்று சமந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)