திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டனூத்து மேட்டூர் காலணியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுபலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்புலட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.