கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பால்குளம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேச்சுப்பாறையில் இருக்கும் ஒரு கூட்டுறவு நிலவள வங்கியில் 1 லட்ச ரூபாய் கடன் கேட்டுள்ளார். அப்போது வங்கி நிறுவனத்தினர் முன்பணமாக 2,100 ரூபாய் செலுத்த வேண்டும் என கூறியதால் அந்த பணத்தை கிருஷ்ணன் செலுத்தியுள்ளார். அதில் 1000 ரூபாய் பங்கு தொகையாக வரவு வைக்கப்பட்டது.

இதனையடுத்து பலமுறை வங்கி நிர்வாகத்தை அணுகியும் கிருஷ்ணனுக்கு கடன் கிடைக்கவில்லை. இதனால் கிருஷ்ணன் குமரி மாவட்டம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் வங்கியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி 5 ஆயிரம் ரூபாய் அபராதம், வழக்கு செலவு தொகை 2,500 ஆகியவற்றை கிருஷ்ணனுக்கு ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.