கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணாமலை கடை பகுதியில் ஒர்க் ஷாப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் ஒருவர் ஒர்க் ஷாப் முன்னால் நேற்று மதியம் பழுது நீக்குவதற்காக லாரியை நிறுத்தி வைத்துள்ளார். அந்த இடம் மேடும், பள்ளமாக இருந்ததோடு, லாரி சக்கரத்தில் தடுப்பு வைக்காததால் தானாக முன்னோக்கி நகர்ந்த லாரியை பார்த்து அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

அதற்குள் லாரி பக்கவாட்டில் இருந்த கடைக்குள் புகுந்து நின்றதால் கடை சேதமானது. உடனடியாக டிரைவர் ஓடி சென்று லாரியில் ஏறி வாகனத்தை நிறுத்தினார். அந்த பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. மதிய நேரம் அந்த வழியாக மாணவ, மாணவிகள் யாரும் நடந்து செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.