தென் கொரியாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், கர்ப்பிணிப் பெண் போல வேடமிட்டு, இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் தெருக்களில் பயணம் செய்தபோது நடந்த நிகழ்வுகள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் ஒரு சமூக பரிசோதனையாக அவர் செய்த இந்த பயணத்தில், செயற்கை குழந்தை பம்ப் அணிந்து வெளிநாட்டுப் பெண் போல வேடமிட்டு, அந்நியர்களிடம் பொதுமக்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை அவர் பதிவு செய்துள்ளார். இந்த காணொளியில், ஹோலி பண்டிகையின் போது சிலர் அவரைச் சூழ்ந்துகொண்டு வலுக்கட்டாயமாக நடந்துகொள்வதும், ஆக்ரோஷமாக நடந்துகொள்வதும் கேமராவில் பதிவாகியுள்ளது.

“>

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், வெளிநாட்டுப் பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்கும் பாதுகாப்பு சவால்களை இந்த காணொளி அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது, இது இணையத்தில் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.