கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கா மண்டபம் பூந்தோட்டம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஜான்சன்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுனில் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜான்சன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று ஜான்சன் மது போதையில் ரப்பர் சீட் உறைய பயன்படுத்தும் திராவகத்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான்சன் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.