திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

இந்நிலையில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வெள்ளத்தில் முதியவரின் சடலம் மிதந்து வந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.