மதுரை மாவட்டத்தில் உள்ள விளாச்சேரியில் அழகு சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சில மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அழகு சுந்தரத்தை கைது செய்தனர்.