நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் அருகே இருக்கும் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அரூர் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் சென்றுள்ளனர். அந்த நிகழ்ச்சிக்கு சென்ற ஐந்து வாலிபர்கள் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கிண்டல் செய்துள்ளனர். இது குறித்து அறிந்த மாணவியின் சகோதரர் அவர்களை தட்டி கேட்டார். அப்போது கோபம் அடைந்த வாலிபர்கள் மாணவியின் சகோதரரை தரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த வாலிபர்கள் வீட்டிற்குள் புகுந்து எனது மகளை பலவந்தமாக தாக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அருணாச்சலம், சதீஷ் உட்பட ஐந்து வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.