கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சீராநாயக்கன்பாளையத்தில் இந்திராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மருமகள் ஆனந்தி கவுண்டர் மில் பகுதியில் வசித்து வருகிறார். அவ்வபோது ஆனந்தி இந்திராணியை வீட்டிற்கு சென்று பார்த்து நலம் விசாரித்து வருவார். கடந்த 20- ஆம் தேதி ஆனந்தி தனது மாமியாரை பார்க்க சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதோடு, இந்திராணி கதவை திறக்காததால் சந்தேகத்தில் ஆனந்தி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது உடல் அழுகிய நிலையில் இந்திராணி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது படுக்கைக்கு அருகே விஷ பாட்டில் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்திராணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.