கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் தொழிலாளியான பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 14-ஆம் தேதி பாலசுப்பிரமணியம் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார்.

இதனையடுத்து அருகம்பாளையத்தில் இருக்கும் ஒரு வீட்டில் வைத்து சிறுமியை பாலசுப்பிரமணியம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பாலசுப்பிரமணியத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.