கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் மணலி எஸ்டேட்டில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் தேவி தனது குடும்பத்துடன் வீட்டிற்கு பின்புறம் இருக்கும் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த தேவியின் கழுத்தில் கடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றார்.

இதனால் திடுக்கிட்டு எழுந்த தேவி திருடன், திருடன் என சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று தப்பி ஓட முயன்ற அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் புதுபாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விக்னேஷை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.