கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எஸ்.செட்டிபள்ளி கிராமத்தில் கிருஷ்ணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்த கிருஷ்ணப்பா நேற்று அதிகாலை கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மஞ்சுளா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தனது கணவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணப்பா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.