கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அரசனட்டி சூர்யா நகர் பகுதியில் கட்டிட மேஸ்திரியான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூர்-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தனியார் நிறுவனம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் முத்து மீது மோதியது.

இதனால் படுகாயமடைந்த முத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே முத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.