திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தொழில் நிமித்தமாக கடந்த 20-ஆம் தேதி உதிரி பாகங்கள் வாங்குவதற்காக கோவைக்கு சென்றுள்ளார். அந்த சிறுவன் நஞ்சப்பா சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த திருநங்கை ஆசீர்வாதம் செய்வது போல பாவனை காட்டியுள்ளார். சிறிது நேரத்தில் சிறுவனிடம் இருந்து 1,300 ரூபாயை பறித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து திருநங்கையை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கண்ணன் என்ற ரோஸ்மா ஜாஸ்மின் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.