கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் இருக்கும் குமரன் சாலையில் ஹோட்டல் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் உரிமையாளர் ஹோட்டலை மூடிவிட்டு சென்றார். ஹோட்டலில் ஊழியரான கபீர் மட்டும் தங்கி இருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஹோட்டல் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கபீர் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கபீரை மீட்டனர். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு ஹோட்டலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.