திருச்சி மாவட்டத்தில் உள்ள கோம்பை புதூர் கிராமத்தில் புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பெண் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பராஜ் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.

ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து புஷ்பராஜ் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது மனைவிக்கு ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்ததாகவும், அந்த வாலிபர் தனது மனைவியை அழைத்து சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.