சேலம் மாவட்டத்தில் உள்ள இருப்பாளி ஊராட்சி பகுதியில் 78 வயதுடைய மூதாட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டார். மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் காந்த மாரியம்மன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு கோவில் திடலில் தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது.

இதனால் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மூதாட்டி தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பூசாரி மூப்பன் வளவு பகுதியில் வைத்து 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மூதாட்டியின் வாயை பொத்தி வலுக்கட்டாயமாக புதருக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் மது போதையில் அந்த நபர் தாக்கியதால் மூதாட்டி படுகாயமடைந்து மயங்கினார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து வீட்டிற்கு சென்ற மூதாட்டி உறவினர்களிடம் நடந்தவற்றை தெரிவித்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.