வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலை பகுதியில் விஜயலட்சுமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் விஜயலட்சுமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.