காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு அளிக்க வந்த ஒரு பெண் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் தீக்குளிக்க முயன்ற பெண் சீனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமனின் மனைவி ராஜேஸ்வரி என்பது தெரியவந்தது.

அவரது சொத்தை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் எழுதி வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் இருந்துள்ளனர். தற்போது பணத்தை கேட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் சொத்தை திருப்பி எழுதி வாங்கி தர வேண்டும் என வலியுறுத்தி ராஜேஸ்வரி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.