திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிஞ்சிவாக்கம் கிராமத்தில் ரஞ்சித் குமார்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் பிரியதர்ஷினி(18) என்ற பெண்ணும் காதலித்து உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பிரியதர்ஷினி குளியல் அறைக்கு சென்று ஹீட்டரை ஆன் செய்தார்.

அப்போது மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி பிரியதர்ஷினி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பிரியதர்ஷினியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.