விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்யாணம் பூண்டி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஜெய்சங்கருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெய்சங்கர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெய்சங்கரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.