கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே தனியார் பள்ளி அமைந்துள்ளது தினமும் தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்கள் சென்று வந்தனர். இந்நிலையில் பேருந்தில் எடுத்து சென்ற ஆசிட் பாட்டில் திடீரென வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் பயணித்த 18 பள்ளி மாணவ மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

அந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக ஆசிட் எடுத்துச் சென்ற போது வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.