ஓபிஎஸ் சார்பில் நடந்த மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர்,  முன்னாள் அமைச்சர் அண்ணன் வெல்லமண்டி நட்ராஜன் அவர்கள் பேசும் போது,  திருச்சியில் நாம் நடத்திய மாநாடு பற்றி காவல்துறை காலைல எங்ககிட்ட கேக்குறாங்க.  எங்க சோழ மண்டல தளபதி  என்ன தெரியுமா சொன்னாரு ? ஐயா ஒரு 30,000 பேரில் இருந்து, 35 ஆயிரம் பேரை தான் இந்த திடல் கொள்ளும். அந்த அளவுக்கு தான் ஆட்கள் வரும். ஒரு மண்டலம் தான்.

ஒரு மண்டல மாநாடுங்கிறதுனால இந்த அளவுக்கு தான் இருக்கும் அப்படின்னு சொல்லிபுட்டு… அன்னைக்கு சாயந்திரம் பார்த்தா…  நாலு மணிக்கு மேல அந்த மாநாட்டு திடலில் உட்கார்ந்து இருந்தது ஒரு லட்சம் பேர்… ஒன்றரை லட்சம் பேர். அப்பா சுத்திலும் நின்னுகிட்டு இருந்தவங்க… வேன்ல நின்னுகிட்டு இருந்தவுங்க  ஒரு லட்சம் பேர். மொத்தம் 2  ½ லட்சம் பேர். அங்கங்க காவல்துறைக்கு தகவல் பறந்துடுச்சு.

ஆஹா திட்டம் போட்டு… நம்ம கண்ணுல மண்ணை தூவி விட்டாங்க. அதனால சுத்திலும் வர வாகனங்கள்.. தஞ்சாவூர் ல இருந்து வர்ற வாகனம்… அதே மாதிரி பெரம்பலூரில் இருந்து வர்ற வாகனம்…  அரியலூரில் இருந்து வர்ற வாகனம்…. எல்லாம் நாலு திசையில இருந்து  வாகனங்கள்…. மதுரை, தேனி,  பெரியகுளத்தில் இருந்து வர்ற வாகனங்கள் எல்லாத்தையும் நிறுத்தி,  ஒரு மண்டலம் மாநாடுல… அந்த வாகனங்கள் அங்கங்க நிறுத்துனது  1  லட்சம் பேர்.   3 ½ லட்சம் பேர் ஒரு மண்டல மாநாடு. 6 மண்டலம் மாநாடுன்னா… 

 6 x 3 =18… 21 லட்சம் பேர் களத்தில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு ஆற்றல் மிகுந்த ஒரு இயக்கமாக அருமை அண்ணன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவருடைய தலைமையிலே வீர  நடை போட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இந்த இயக்கம் என தெரிவித்தார்.