ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அந்த அணியின் செய்தி தொடர்பாளர் கண்ணன்.ஜிஅவர்கள்  பேசும் போது, கூலிக்கு மாரடிக்கும் கூட்டமே… இனி உங்கள் கூட்டத்தின் ஆட்டம் பலிக்காது. இனி உங்கள் கொடுமைகள் எல்லாம் நிலைக்காது. சிங்கத்தின் குகையில் சிறு நரிகள் சேட்டையா ?  நரியனை அடித்து நொறுக்கும் காலம் நெருங்கிவிட்டது. வாலினை  ஓட்ட நறுக்கு நேரம் நெருங்கி விட்டது. இடையில் வந்த பாடிகள் எல்லாம்… இனி இடையினிலே போகப்போகுது. இம்சிப்பட்டே சாகப்போகுது.

தர்மம் தீர்ப்பை தரப்போகுது… நம் தலைவர் ஆட்சி வரப்போகுது.. நம் தர்மயுத்தம் ஒரு நாளும் வீண் போவதில்லை. தங்கத்தமிழ் தலைவராக… தரணி போற்றும் முதல்வராக…. தகுதியோடு வருகிறார் தலைமை ஏற்று வருகிறார்…. கழகத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளராக அய்யா ஓபிஎஸ் அவர்களே வருகிறார். ஆர்ப்பரித்து வருகிறார்,  நம்மை அரவணைக்க வருகிறார். இங்கே இருப்பது தொண்டர்களால், தொண்டர்களுக்காக, தொண்டனால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கம்.

அந்த இயக்கத்திற்கு தலைவர், நாமெல்லாம் தொண்டர்கள். அங்கு இருப்பது குண்டர்களால்.. குண்டர்களுக்காக… ஒரு குண்டனால்  வழிநடத்தப்படும் ஒரு இயக்கம்.. இன்றைய மாநாடு என்பது ஊசிப்போன சாப்பாடு. தொண்டர்கள் எல்லாம் ஒரே  கூப்பாடு… பிசுபிசுத்து  போன ஏற்பாடு… அண்ணா நாமம்  வாழ்க… புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நாமம் வாழ்க… புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நாமம் வாழ்க…. கழகத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் ஐயா ஓபிஎஸ் புகழ் ஓங்குக ஓங்குக என்று கூறி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் என பேசி முடித்தார்.