பீகாரில் சமீப காலமாக பாலம், ரயில் என்ஜின் போன்றவை திருடு போனதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு ரயில் தண்டவாளங்கள் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் உள்ள சமஸ்டிபூர்  பந்தவூல் எனும் ரயில் நிலையம் அமைந்துள்ளது. லோஹோத் என்னும் சர்க்கரை ஆலைக்கு இந்த ரயில் நிலையத்திலிருந்து ரயில்வே பாதை ஒன்று உள்ளது. சில வருடங்களாக இந்த சர்க்கரை ஆலை இயங்கப்படாமல் இருந்த நிலையில் இந்த பாதையில் ரயில் போக்குவரத்து நடைபெறாமல் இருந்துள்ளது.

இந்நிலையில் மர்ம கும்பல் ஒன்று சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பாதையில் உள்ள ரயில் தண்டவாளங்களை திருடி விற்பனை செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ரயில்வே நிர்வாகம் ரயில்வே பாதுகாப்பு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.