கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி நிமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் ஆனால் அதற்கு உரிய மருத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் அவரது சகோதரர் அலெக்ஸ் குற்றம் சாட்டி வந்தார். அதற்கு உம்மன் சாண்டியின் மகன் நேற்று விளக்கம் அளித்த நிலையில் இன்றும் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயோதிகம் காரணமாக அவரது உடல்நிலை தளர்ந்துள்ளது.