பொதுவாக பண்டிகை காலங்களில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல  சிறப்பு சலுகைகளை அறிவிப்பது வழக்கம். குறிப்பாக அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வாரி வழங்கும். இதற்காகவே காத்திருந்து ஷாப்பிங்க் செய்பவர்கள் ஏராளமானவர்கள். அதேபோல இந்த ஆண்டிலிருந்து புத்தாண்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை தொடங்குகிறது. இதன் மூலம் பல பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம். இயர் எண்ட் சேல் என்ற பெயரில் சிறப்பு விற்பனை தொடங்க உள்ளது. டிசம்பர் ஒன்பதாம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெறும். இந்த காலகட்டத்தில் பல வகையான பொருட்களை பெரிய தள்ளுபடியில் வாங்க வாய்ப்பு கிடைக்கிறது.