அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், VM ராஜலக்ஷ்மி, எங்கள் வாழ்வில் இருள் கிழித்து,  அச்சமும் – அடிமைத்தனமும் அகல செய்து, நாடு குறித்தே  நாளும் சிந்தித்து, மக்களுக்கு நாள்தோறும் நல்லதையே செய்து, நல்லதே நினைத்து, தொழிலாளர்களின் தோழனாய் – தொண்டனாய் – தலைவனாய் – இந்த மண்ணில் வாழ்ந்த மகத்தான தலைவர்களான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும்,

புரட்சித்தலைவி அம்மா அவர்களும். தர்மத்தின் தாயகமாய் – தாய்மையின் ஓவியம்மாய் – அண்ணமிடும் அக்ஷயமாய் தமிழகத்தின் திருவிளக்காய்,  ஏழைகளின் ஒளி விளக்காய் திகழ்ந்த இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள். இரண்டு கோடி தொண்டர்களின் உயிரில் – உணர்வில் – உதிரத்தில் ஒன்றென கலந்த தாயே… தமிழினமே தாய் என்ற மந்திர சொல்லால் உச்சரித்த இளவரசையே….  எதிரிகளின் இதயத்தையும் ஈகை குணத்தால் வென்று,  இலையே அலையாக தமிழகத்தில் மலரச்செய்தவரே…

மண்ணாழ பிறந்தவராய், மதிநுட்பம் நிறைந்தவராய், எந்நாளும் மக்கள் உள்ளத்தில் நிறைந்தவராய் இன்றும் எங்கள் உங்களில் வாழும் உள்ளம் நிறைந்த தாயே…  தமிழகமே தங்களை தலைவணங்கி நிற்கிறது. என் உடலில் உயிர் உள்ளவரை நன்றி என்கின்ற ஒற்றை சொல்லையே உங்களுக்கு திருவடி மலர்களாக சமர்ப்பித்து வணங்கி நிற்பேன்.

மண்ணுள்ள வரை… விண்ணுள்ள வரை.. நீர் உள்ளவரை.. நெருப்புள்ள வரை.. காற்றுள்ள வரை.. புரட்சித்தலைவரின் புகழும் , புரட்சித்தலைவி அம்மாவின் புகழும் என்றும் நிலைத்து நிற்கும். இனி தமிழகத்தில் ஒரே கட்சி, ஒரே கொடி அது ஆஇஅதிமுக தான் என்பதை இந்த மாநாடு சொல்கின்றது என்பதை இந்த இடத்தில் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன் என தெரிவித்தார்.