சேலம் மாவட்டத்தில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தனது மருமகளிடம் வரதட்சணை கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோலியா என்பவருக்கும் சேலம் மாவட்டம் மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்தின் மகன் சங்கருக்கும் 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், மனோலியா தனது கணவர் சங்கர் மற்றும் மாமனார் சதாசிவம் மீது வரதட்சணை கேட்டு கொடுமை புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து, சங்கர் மனோலியாவை தொடர்பு கொண்டு, “நீ கொடுத்த புகாரை திரும்ப பெறவில்லை என்றால் உன்னுடைய ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன்”என மிரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.