தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு இடங்களில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை கோட்டூர் பேருந்து நிலையம் அருகே திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் ரவி என்னை மதிப்பிற்குரிய நண்பர் என்று குறிப்பிட்டதற்கு அவருக்கு நன்றி.

ஆளுநர் கொள்கையில் எங்களுக்கு எந்தவித சமரசமும் கிடையாது. அவர் கொள்கையில் எங்களோடு சமரசம் கிடையாது என்றால் அவர் நட்பை துறக்கவும் தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நான்கு மாதங்களில் கொரோனா தொற்றிலிருந்து மாநிலத்தை மீட்டார். முதல்வராக ஸ்டாலின் இருக்கும் வரை ஒரு ரவி அல்ல ஓர் ஆயிரம் ரவி வந்தாலும் இந்த ஆட்சியை அசைக்கவோ ஆட்டவோ முடியாது என்று தெரிவித்தார்.