சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே  போனாலும் கவலை இல்லை. சனாதனம் குறித்து அம்பேத்கர், பெரியார், அண்ணா பேசாததையா நான் பேசி விட்டேன். சனாதனம் பற்றி பேசிய அண்ணா பெயரில் உள்ள கட்சியான அதிமுகவின் கருத்தை நான் அறிய விரும்புகின்றேன்.

இந்தியாவை மாற்றி  காட்டுகிறேன் என வாக்குறுதி அளித்த மோடி அதை ”பாரத்” என மாற்றிவிட்டார்.  இந்தியாவை மாற்றுவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமருக்கு வாழ்த்துக்கள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.