நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து வீரர்களான ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஷோயப் பஷீர் இடையே மைதானத்திலேயே ஒரு கசப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

போட்டியின் 113-வது ஓவரில், ஆர்ச்சரின் பந்துவீச்சில் டாம் பிளண்டல் கொடுத்த எளிதான கேட்ச்சை பஷீர் நழுவவிட்டதால், ஆர்ச்சர் கடும் அதிருப்தியில் இருந்தார். இதனால் ஆர்ச்சரின் கோபம் மைதானத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அடுத்த ஓவரில் பஷீர் சிறப்பான முறையில் கேட்ச் பிடித்து விக்கெட் எடுத்தபோது, மற்ற வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டாலும், ஆர்ச்சர் மட்டும் எல்லைக் கோட்டுக்கு அருகே தனியாகச் சென்றுவிட்டார்.

கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலையிட்டு ஆர்ச்சரை அழைத்த பிறகுதான், அவர் மற்ற வீரர்களுடன் இணைந்து கொண்டாட்டத்தில் பங்கேற்றார். பஷீர் கையை நீட்டியதால் தயக்கத்துடன் அவருடன் கை குலுக்கினாலும், ஆர்ச்சரின் முகத்தில் இருந்த அதிருப்தி தெளிவாகத் தெரிந்தது.

“>

 

அதே ஓவரில் பஷீர் மற்றொரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் குவிக்க, இங்கிலாந்து அணி 354 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தற்போது நியூசிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடி வரும் நிலையில், இந்த ஆர்ச்சர்-பஷீர் மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.