கல்வி உதவித்தொகைக்கான  என் எம் எம் எஸ் NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 22ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் டிசம்பர் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.