உத்தரபிரதேசம் மிர்சாபூர் மாவட்டத்தின் கூடுதல் நீதிபதியாக இருந்து வருபவர் தலேவார் சிங். இவர் நீதிமன்றத்தில் உள்ள தன் அறையில் கருப்பு அங்கியை அணிந்து கொண்டு இருந்த நிலையில், அவரது இடுப்பு பகுதியில் இருந்த துப்பாக்கி தவறுதலாக தரையில் விழுந்து சுட்டது. அப்போது துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா, நீதிபதி தலேவார் சிங் கால் பகுதியை துளைத்தது. இதையடுத்து சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்த நிலையில், வலியால் நீதிபது தலேவார் சிங் துடிதுடித்துள்ளார்.

அதன்பின் அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனை தொடர்ந்து அறுவை சிகிச்சையின் வாயிலாக அவரது கால் பகுதியில் பாய்ந்த குண்டு எடுக்கப்பட்டது. தற்போது நீதிபதி நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சொந்த பாதுகாப்புக்காக உரிய உரிமம் பெற்று நீதிபதி துப்பாக்கி வைத்து இருந்ததாகவும், அங்கியை அணியும்போது எதிர்பாராத வகையில் தரையில் துப்பாக்கி விழுந்து வெடித்ததாகவும் காவல்துறையினர் கூறினர்.