தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு இன்று முதல் “Z” பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 24 மணி நேரமும் சிஆர்பிஎஃப் கமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். மேலும் இந்தியா முழுவதும் அவா் எங்கு சென்றாலும் பாதுகாப்பு வாகனமும் உடன் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலைக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றி மத்திய உளவு அமைப்புகள் அளித்த அறிக்கையின் படி அவருக்கான பாதுகாப்பு “எக்ஸ்” பிரிவில் இருந்து “இஸட்” பிரிவுக்கு மேம்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நாட்டில் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பணியின் கீழ் மத்திய ரிசர்வ் போலீஸ் படை சுமார் 100 பேருக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது. அமித்ஷா, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இந்த பாதுகாப்பில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.