ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். அவரின் இப்பேச்சு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக ஆளுநர் ரவி கூறியிருப்பது ஆதாரமற்றது. ஆளுநர் ரவி ஆதாரம் இல்லாமல் பேசுவதை இனி நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர் நினைக்கும் கொள்கைகளை தமிழ்நாட்டில் பேசக்கூடாது” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்