தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பைவிட 2 -3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

அதேபோல் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமான வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமான வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.