சென்னை ECRல் கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த காண்டியப்பன்(40) என்பவர் மதுவுக்கு அடிமையானவர் ஆவார். இவர் நேற்று அதிகாலை மதுபோதையில் சாலையில் நிலைத் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று அவர் மீது ஏறி இறங்கியது.

இதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழத்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.