உலக புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டில் 750 காளைகள் மற்றும் 335 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டு உள்ளனர். அதே நேரம் போட்டியின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு நடத்தப்பட்ட உடற்பரிசோதனையில் 8 பேர் ஆள் மாறாட்டம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை உடனே விழா குழுவினர் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.