இந்தியாவில் தற்போது மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள நெக்ஸ்ட்டு என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நீட் தேர்வு ஏற்கனவே மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த  நிலையில் NEXT தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும் மாநில அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் மிக பெரிய பாதுப்பை ஏற்படுத்தும். எனவே  ஒன்றிய அரசு இதை கைவிட வேண்டும்”என்று முதல்வர் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.