தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி பேசுவதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அவர்கள் யாருக்கும் தகுதி இல்லை என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், அண்ணாமலை பற்றி பேச அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் தகுதி இல்லை, சி.வி.சண்முகம் பேசுவது எல்லாம் சுத்த அபத்தமானது, பேசிய பிறகு என்ன பேசினார் என்பது அவருக்கே தெரியாது என்றார். ஊழல் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தெரிவித்திருந்த கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.